16 மாநகராட்சிகள் விரிவாக்கம்… நகரமயமாகும் 149 ஊராட்சிகள்!

chennai corporation 1200

மிழகத்தில் 149 ஊராட்சிகளை இணைத்து 16 மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படுவதாகவும், புதிதாக 13 நகராட்சிகளை உருவாக்கவும், 25 பேரூராட்சிகளை உருவாக்கவும், 29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவினை மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தற்போது, 28 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம், வரும் 5.1.2025 ஆம் தேதியன்று நிறைவடைகிறது.

இந்த நிலையில், மாவட்டங்களில் உள்ள நகர்ப்புறத்தன்மை வாய்ந்த ஊராட்சிகளை அருகில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளுடன் இணைக்கவும், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்த, உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு தொடர்பான உயர்நிலைக்குழு, மாவட்ட ஆட்சியர்களுடன் தொடர் ஆலோசனை மேற்கொண்டது.

இதன் அடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைக்கவும்,

திருவாரூர், திருவள்ளுர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சியை இணைக்கவும், பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைத்தும், தனித்தும் கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகளை உருவாக்கவும், கிராம ஊராட்சிகளை இணைத்து மற்றும் தனியாகவும் ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை உருவாக்கவும், 29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவினை மேற்கொண்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளார்.

விரிவாக்கம் செய்யப்படும் 16 மாநகராட்சிகள்

பெருநகர சென்னை மாநகராட்சி

( திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லைக்குள் அமைந்துள்ள அடையாளம்பட்டு, வானகரம் ஆகிய கிராம ஊராட்சிகள் இணைப்பு)

கோவை ( 1 நகராட்சி, 4 பேரூராட்சிகள், 9 ஊராட்சிகள் இணைப்பு)

மதுரை ( 1 பேரூராட்சி, 16 ஊராட்சிகள் இணைப்பு)

சேலம் ( 5 ஊராட்சிகள் இணைப்பு)

திருச்சி ( 22 ஊராட்சிகள் இணைப்பு)

கடலூர் (13 ஊராட்சிகள் இணைப்பு)

திண்டுக்கல் ( 8 ஊராட்சிகள் இணைப்பு)

ஈரோடு ( 4 ஊராட்சிகள் இணைப்பு)

கரூர் (2 ஊராட்சிகள் இணைப்பு)

ஓசூர் ( 7 ஊராட்சிகள் இணைப்பு)

திருப்பூர் ( 2 ஊராட்சிகள் இணைப்பு)

ஆவடி

( பூவிருந்தவல்லி, திருவேற்காடு, திருநின்றவூர் ஆகிய 3 நகராட்சிகளும், கருணாகரச்சேரி, நடுக்குத்தகை, நெமிலிச்சேரி, மோரை, பாலவீடு, வெள்ளானூர், அயப்பாக்கம், காட்டுப்பாக்கம், கண்ணப்பாளையம், சோராஞ்சேரி, பாணவேடுதோட்டம், சென்னீர்குப்பம், நசரத்பேட்டை, பாரிவாக்கம், வரதராஜபுரம், அகரவேல், மேப்பூர் ஆகிய 17 கிராம ஊராட்சிகள் இணைப்பு)

கும்பகோணம் ( 12 ஊராட்சிகள் இணைப்பு)

தஞ்சாவூர் ( 14 ஊராட்சிகள் இணைப்பு)

தூத்துக்குடி ( 7 ஊராட்சிகள் இணைப்பு)

சிவகாசி ( 9 ஊராட்சிகள் இணைப்பு)

தரம் உயர்த்தப்படும் பேரூராட்சி, நகராட்சிகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடம்பத்தூர் கிராம ஊராட்சி இனி கடம்பத்தூர் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது. அதேபோன்று சோழவரம் ஊராட்சி ஒன்றியம் பாடியநல்லூர் (பாடியநல்லூர் மற்றும் நல்லூர்) பேரூராட்சியுடன் இணைக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், புது கும்மிடிப்பூண்டி மற்றும் பெத்திக்குப்பம் ஊராட்சி கும்மிடிப்பூண்டி பேரூராட்சியுடன் இணைக்கப்படுகிறது. சோழவரம் ஊராட்சி ஒன்றியம், மல்லியன்குப்பம் ஊராட்சி, பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம், ராமசந்திராபுரம், சூரராஜப்பட்டடை ஊராட்சி பள்ளிப்பட்டு பேரூராட்சியுடன் இணைக்கப்படுகிறது.

திருவள்ளூர் நகராட்சியுடன் சேலை (பகுதி), காக்களூர், ஈக்காடு, தலக்காஞ்சேரி, திருப்பாச்சூர், சிறுவானூர், மேல்நல்லத்தூர், வெங்கத்தூர், பட்லூர் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்படுகிறது.

பொன்னேரி நகராட்சியுடன் தடப்பெரும்பாக்கம், கொடூர் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்படுகிறது.

திருத்தணி நகராட்சியுடன் கார்த்திகேயபுரம் மற்றும் பட்டாபிராமபுரம் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் இணைக்கப்படும்.

திருவாரூர், திருவள்ளுர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சி இணைப்பு.

13 புதிய நகராட்சிகள்

பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைத்தும், தனித்தும் கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 நகராட்சிகள் புதிதாக உருவாக்கம்.

25 புதிய பேரூராட்சிகள்

கிராம ஊராட்சிகளை இணைத்து மற்றும் தனியாகவும் ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகள் உருவாக்கவும், 29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Cdu chorweiler bringt kölner norden stärker in die ausschüsse der stadt köln ein. Consent to service google ads. How does olympia softgel manufacturing differ from standard supplement factories ?.