டி20 உலகக் கோப்பை: சரித்திர சாதனை படைத்த முதல் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா!

Screenshot 2026-02-17 142808 (2)

டி20 உலகக் கோப்பையில் நெதர்லாந்தை வீழ்த்திய ஆட்டத்தில், 6000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில், நேற்று நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு தனது ஆல்-ரவுண்ட் ஆட்டத்தால் வலுசேர்த்த நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா, சர்வதேச டி20 அரங்கில் ஒரு இமாலய சாதனையைத் தன்வசப்படுத்தி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார்.

நெதர்லாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில் 30 ரன்கள் விளாசியதுடன், பந்துவீச்சிலும் ஒரு முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் 6,000 ரன்களையும் 200 விக்கெட்டுகளையும் கடந்த முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான பெருமையை ஹர்திக் பாண்டியா பெற்றுள்ளார். இதன் மூலம் உலக அளவில் இந்தச் சாதனையை நிகழ்த்திய 6-வது வீரர் என்ற கௌரவத்தையும் அவர் அடைந்துள்ளார். இதற்கு முன்னதாக கீரன் பொல்லார்ட், ஆண்ட்ரே ரசல், ஷகிப் அல் ஹசன், முகமது நபி மற்றும் டுவைன் பிராவோ ஆகிய சர்வதேச ஜாம்பவான்கள் மட்டுமே இந்த இரட்டை மைல்கல்லை எட்டியுள்ளனர்.

இந்திய அணியின் மற்ற முன்னணி ஆல்-ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் 200 விக்கெட்டுகளைக் கடந்திருந்தாலும், பேட்டிங்கில் 6,000 ரன்கள் என்ற இலக்கை இன்னும் எட்டவில்லை. ஆனால், பாண்டியா தனது அதிரடி பேட்டிங் மற்றும் துல்லியமான பந்துவீச்சால் இந்தச் சாதனையை முன்கூட்டியே எட்டிப் பிடித்துள்ளார். பாண்டியாவின் இந்த அதிரடி ஃபார்ம், உலகக் கோப்பையின் அடுத்தடுத்த சுற்றுகளில் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

essential tools for website and social media. Just a moment.... power only wyoming.