ஸ்ட்ரைக் வாபஸ்! ஆம்னி சேவை மீண்டும் தொடக்கம்

New Project (9)

ஆம்னி பேருந்து வேலை நிறுத்தம் வாபஸ்; 18 நாட்களுக்குப் பிறகு சேவை மீண்டும் தொடக்கம்

ஆம்னி பேருந்துகளின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால், சேவைகள் இன்று முதல் மீண்டும் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.

சாலை வரி பிரச்சனையை எதிர்த்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கடந்த நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. இதன் காரணமாக மாநிலங்களுக்கு இடையிலான ஆம்னி பேருந்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், 18 நாட்களுக்குப் பிறகு ஆம்னி பேருந்து சேவைகள் இன்று முதல் மீண்டும் வழக்கம்போல் தொடங்கியுள்ளன. போக்குவரத்து துறை அமைச்சர் வழங்கிய உறுதிமொழியை அடுத்து, வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும், சபரிமலைக்கு செல்லும் அய்யப்பன் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு, சேவையை உடனடியாக மீண்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

白茶. wi fi 全覆蓋. tech news today.