ஏடிஎம்மில் ரூ. 10 நோட்டுகளா? மத்திய அரசின் ‘ஹைப்ரிட் ஏடிஎம்’ அதிரடித் திட்டம்!

New Project (43)

பொதுமக்களிடையே நிலவும் சில்லறைத் தட்டுப்பாட்டைப் போக்க, ஏடிஎம்களில் ரூ. 10, ரூ. 20 மற்றும் ரூ. 50 நோட்டுகளைப் பெறும் வசதியுடன் கூடிய புதிய ஹைப்ரிட் ஏடிஎம் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியாவில் அன்றாடத் தேவைகளுக்காகப் பெரிய நோட்டுகளைச் சில்லறையாக மாற்றுவதில் பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்களைக் குறைக்க மத்திய அரசு ஒரு அதிரடியான திட்டத்தை முன்னெடுத்துள்ளது. தற்போது ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.500, ரூ.200 மற்றும் ரூ.100 நோட்டுகள் மட்டுமே பெரும்பாலும் கிடைக்கும் நிலையில், இனி வரும் காலங்களில் ரூ.10, ரூ.20 மற்றும் ரூ.50 போன்ற குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளையும் ஏடிஎம்களில் இருந்தே நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகமாக உள்ளது. இதற்காக ‘ஹைப்ரிட் ஏடிஎம்’ (Hybrid ATM) எனப்படும் புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை நாடு முழுவதும் நிறுவ அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த இயந்திரங்களின் சிறப்பம்சமே, நம்மிடம் உள்ள ரூ.500 அல்லது ரூ.200 நோட்டுகளை அதில் செலுத்தி, அதற்குப் பதிலாக 50 ரூபாய்க்கும் குறைவான மதிப்புள்ள சில்லறை நோட்டுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதாகும்.

இந்தத் திட்டம் அமலுக்கு வரும்போது பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் காய்கறிச் சந்தைகள் போன்ற இடங்களில் மக்கள் சந்திக்கும் சில்லறை தட்டுப்பாடு பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். குறிப்பாக, டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தாத சாமானிய மக்களுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் இந்த வசதி பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக மும்பை போன்ற பெருநகரங்களில் இதற்கான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன் வெற்றியைத் தொடர்ந்து விரைவில் தமிழகம் உட்பட நாடு முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இந்த ஹைப்ரிட் ஏடிஎம்கள் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பணப்புழக்கத்தை எளிதாக்கவும், பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கவும் மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சி சமூக வலைதளங்களில் பலரது வரவேற்பைப் பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

联系我们. International social service hong kong branch. tech news today ».