WPL கோப்பையை வென்றது RCB!

New Project (60)

2-வது முறையாக WPL சாம்பியன் பட்டம் வென்றது ஆர்சிபி – வரலாற்று சாதனை படைத்த மந்தனா படைக்கு விராட் கோலி வாழ்த்து!

வதோதராவில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் (WPL) இறுதிப்போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, முதலில் களம் புகுந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி தொடக்கம் முதலே வாணவேடிக்கை காட்டியது. அந்த அணியின் வீராங்கனைகள் பெங்களூருவின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடிக்க, 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை எட்டியது. இறுதிப் போட்டி போன்ற ஒரு அழுத்தமான சூழலில் 200 ரன்களுக்கு மேல் குவித்தது டெல்லி அணிக்கு மிகப்பெரிய சாதகமாகப் பார்க்கப்பட்டது.

இருப்பினும், 204 ரன்கள் என்ற கடினமான இலக்கை எதிர்கொண்ட பெங்களூரு அணி, சற்றும் மனம் தளராமல் அதிரடியாக விளையாடி 19.4 ஓவர்களிலேயே வெற்றியை எட்டிப் பிடித்தது. இது டபிள்யூ.பி.எல் வரலாற்றிலேயே பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த ரன் சேஸ் ஆகும். இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் மற்றும் டபிள்யூ.பி.எல் ஆகிய இரண்டு கோப்பைகளையும் ஒரே நேரத்தில் தன்வசம் வைத்துள்ள முதல் அணி என்ற அரிய சாதனையை ஆர்சிபி படைத்துள்ளது. இந்த வெற்றியைப் பாராட்டிய விராட் கோலி, கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் அவரது அணியினர் இந்த வெற்றிக்கு மிகவும் தகுதியானவர்கள் என்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

乌龙茶. Ip cam nvr 系統設定服務. Top 10 emerging technologies to master in 2025 : future proof your career !.