பொங்கல் பண்டிகை: சொந்த ஊரிலிருந்து பேருந்தில் புறப்படுவோர் கவனத்துக்கு…

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் சென்றவர்கள், மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்பத் தொடங்கி உள்ளனர். திங்கட்கிழமை முதல் பணிக்குத் திரும்ப வேண்டும் என்பதால், நாளை மற்றும் நாளை மறுதினம் அதிகம் பேர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர். மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திடவும், பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பிடும் வகையில் சிறப்புப் பேருந்துகளை இயக்கிட முதலமைச்சர் உத்தரவிட்டார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பின்படி, கடந்த 10 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை 4 நாட்களில் சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2.092 பேருந்துகளுடன் 7,498 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 15,866 பேருந்துகள் இயக்கப்பட்டு, 8.73 லட்சம் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

பொங்கல் திருநாள் முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக, ஜன.15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,290 சிறப்புப் பேருந்துகளும், ஏனய பிற முக்கிய ஊர்களிலிருந்து 6,926 பேருந்துகளும் என ஆக மொத்தம் 22,676 பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், இன்று 28,022 பயணிகளும், நாளை 29,056 பயணிகளும் மற்றும் நாளை மறுநாள் 42,917 பயணிகளும் பேருந்தில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

எனவே, பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து, தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு காலியாக உள்ள இருக்கைகளில் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

news john graham, the psychological oasis. But іѕ іt juѕt an асt ?. Geld im automaten vergessen.