முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை!

New Project (9)

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், அதைத் தடுத்து நிறுத்தி தமிழ்நாட்டின் நதிநீர் உரிமையை நிலைநாட்டுவது குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், கர்நாடக அரசின் இந்த அணை கட்டும் முயற்சியைச் சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்த மிக முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த மூத்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாட்டை உறுதியாக முன்னெடுப்பதற்கான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் வியூகங்கள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழக உரிமையை எவ்வித சமரசமுமின்றிப் பாதுகாப்பதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதை இந்த ஆலோசனை வெளிப்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?்?. legal entity information. た?.