மாநிலங்களவை எம்.பி.யாக தமிழில் பதவியேற்றார் மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசன்!

New Project - 2025-07-25T143754.317

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், காலியான இடங்களுக்கு கடந்த ஜூன் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக மற்றும் அதிமுக முன்னிறுத்திய ஆறு வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில், திமுக கூட்டணி சார்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.நேற்று செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “மக்களின் வாழ்த்துகளுடன், உறுதிமொழி எடுக்கவும், என் பெயரை பதிவு செய்யவும் மாநிலங்களவைக்கு செல்கிறேன். இது ஒரு இந்தியனாக எனக்கு வழங்கப்பட்ட மரியாதையும் கடமையும் ஆகும். பெருமையுடன் இந்த கடமையை செய்ய டெல்லி செல்கிறேன்,” என்று தெரிவித்தார்.

இன்று, கமல்ஹாசன் தனது தாய்மொழியான தமிழில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் #நான்கமல்ஹாசன் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். மேலும், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கமல்ஹாசனுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த பதவியேற்பு, அவரது அரசியல் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ai blog : create content automatically and earn. Just a moment.... Hawaii car transport.