அனுமதியின்றி ‛சிவராத்திரி….’ பாடல் | வனிதா விஜயகுமார் மீது இளையராஜா வழக்கு!

New Project (93)

இசைஞானி இளையராஜா, வனிதா விஜயகுமார் நடித்து தயாரித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில், ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தின் ‘ராத்திரி சிவராத்திரி’ பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்தப் பாடலை படத்தில் இருந்து நீக்க உத்தரவிடக் கோரியுள்ளார். இவ்வழக்கு வரும் திங்கட்கிழமை (ஜூலை 14) விசாரணைக்கு வருகிறது.‘Mrs & Mr’ படம், வனிதா மற்றும் நடன இயக்குநர் ராபர்ட் நடிப்பில் இன்று (ஜூலை 11) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இளையராஜா தனது மனுவில், “காப்புரிமை சட்டப்படி, எனது பாடலை பயன்படுத்த முன் அனுமதி பெற வேண்டும். ஆனால், அனுமதியின்றி பாடலை மாற்றி பயன்படுத்தியுள்ளனர். இது காப்புரிமை மீறல்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, வழக்கை அவசரமாக விசாரிக்க ஒப்புதல் அளித்து, தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.இளையராஜா, 7,000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்த இந்திய சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர். ஆனால், 2019 முதல் அவரது பாடல்களை காப்புரிமை இன்றி பயன்படுத்தியதற்காக இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்புவது சர்ச்சையாகியுள்ளது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா போன்றவர்களுக்கு மேடை நிகழ்ச்சிகளில் பாட தடை விதித்தது பெரும் விமர்சனத்தைப் பெற்றது. இசையமைப்பாளருக்கும், தயாரிப்பாளருக்கும் காப்புரிமையில் சம உரிமை உள்ளதாக வாதங்கள் எழினும், இளையராஜா தனது இசைக்கு முழு உரிமை கோருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

???. International social service hong kong branch. tech news today.