இளையராஜாவுக்கு பத்மபாணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது!

New Project (27)

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, 11-வது அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் ‘பத்மபாணி’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படக் கலையை உலகளவில் கொண்டாடும் 11-வது அஜந்தா–எல்லோரா சர்வதேச திரைப்பட விழா, வரும் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 4 வரை, மகாராஷ்டிரா மாநிலத்தின் சத்ரபதி சம்பாஜி நகரம் நகரில் நடைபெற உள்ளது.

இந்த சர்வதேச திரைப்பட விழாவின் முக்கிய அம்சமாக, ஒவ்வோர் ஆண்டும் சிறந்த கலைஞர்களுக்கு பத்மபாணி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பத்மபாணி விருது, தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் இசை மாமேதையுமான இளையராஜா அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விழாவின் தொடக்க நிகழ்ச்சி, சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள எம்ஜிஎம் வளாகத்தின் ருக்மிணி அரங்கில், ஜனவரி 28ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் இளையராஜாவுக்கு பத்மபாணி விருது வழங்கப்பட உள்ளது.

இந்த விருதுடன், பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படுவதுடன், இந்தியத் திரையுலகில் அவர் பதித்த ஆழமான சுவடுகளுக்குக் கிடைக்கின்ற மகத்தான மகுடம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

嘿,朋友们!?. wi fi 全覆蓋. Game changers : how recent tech updates are transforming industries » tech news today.