6 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு… தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

New Project (63)

இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் அக்டோபர் 15 முதல் 21 வரை 7 முதல் 11 செ.மீ வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இந்த ஏழு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால், சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கடலோர மற்றும் மலைப்பகுதிகளில் மழை தீவிரமாக இருக்கலாம். மக்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடவும், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகங்கள், மழை பாதிப்புகளை கையாள தயார் நிலையில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Consent to service google ads. בלה ירושלים בלבד נערות ליווי בירושלים strip johnny. Cumhuriyet mahallesi taksi | Çerkezköy 7/24 hızlı taksi.