இனி தங்கம் வாங்குவதையே மறந்துவிடுங்கள்! கூரையை பிச்சிக்கிட்டு போதும் விலை…

New Project (33)

தமிழகத்தில் தங்கம் விலை இன்று வரலாறு காணாத வகையில் அதிரடியாக உயர்ந்து, நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் இரண்டு முறை விலை உயர்த்தப்பட்டு, சவரனுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.4,120 அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரம்:

ஒரு சவரன் ஆபரணத் தங்கம்: ரூ.1,15,320

ஒரு கிராம் தங்கம்: ரூ.14,415

விலை ஏற்றத்தின் பின்னணி: இன்று காலை சந்தை தொடங்கியபோது சவரனுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு உயர்ந்த நிலையில், மதியத்திற்கு மேல் மீண்டும் விலை அதிரடியாக அதிகரித்தது. இரண்டாம் கட்ட உயர்வாக மட்டும் சவரனுக்கு ரூ.1,320 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.4,120 உயர்ந்திருப்பது நகை விற்பனையாளர்களையும், பொதுமக்களையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கவனம் தங்கம் மீது திரும்பியுள்ளதே இந்தத் திடீர் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. திருமண விசேஷங்கள் வரவிருக்கும் நிலையில், தங்கத்தின் இந்த “மின்னல் வேக” விலை உயர்வு நடுத்தரக் குடும்பத்தினருக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை மீண்டும் எப்போது குறையும் அல்லது இந்த உயர்வு இன்னும் தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

For websites and social media. Just a moment.... power only wyoming.