கட்டபொம்மனை காட்டிக்கொடுத்தாரா எட்டப்பன்?

Picsart_25-01-23_14-30-25-755

‘எட்டப்பன்’ என்ற பெயரைக் கேட்டாலே நினைவுக்கு வருவது எட்டயபுரமும், வீரபாண்டிய கட்டப்பொம்மன் என்ற பெயரும் தான். காரணம், தமிழ் சினிமா…

“காலங்காலமாக வந்த திரைப்படங்கள், ‘கட்டப்பொம்மனைக் காட்டிக்கொடுத்தவர் எட்டப்பன்’ என மக்களிடையே ஒரு தவறான தகவலை பரப்பிவிட்டுவிட்டது ” என ஆதங்கத்துடன் குறிப்பிடுகிறார் எட்டயபுரத்தின் 42 ஆவது பட்டத்து ராஜாவான திரு. சந்திர சைதன்யா.

“உண்மையில் ‘எட்டப்பன்’ என்ற பெயர் கருணைக்கும் வீரத்துக்குமான குறியீடாக இருக்க வேண்டிய பெயர். ஆனால், தமிழ் சினிமா போன்ற வெகுஜன ஊடகங்களில் உண்மை என்ன என்பதே தெரியாமல் தவறான தகவல் பரவி விட்டது” என்கிறார் அவர்.

உண்மையில் ‘எட்டப்பன்’ என்பவர் யார், அவருக்கு எப்படி இந்த பெயர் வந்தது என்பது குறித்த நெகிழ்ச்சியான தகவலை நம்மிடம் பகிர்ந்த திரு. சந்திர சைதன்யா, “எட்டயபுர நாயக்கர் அரசர்களில் 11 ஆவது பட்டத்து ராஜாவான நல்லம நாயக்கர், அப்போதைய விஜய நகரை ஆண்ட சாம்பு மகாராஜாவைக் காண ஒருமுறை சென்றிருந்தார். சாம்பு ராஜாவின் அரண்மனையை சோமன் எனும் மல்யுத்த வீரன் காவல் காத்து வந்தான். சாம்புவை காண வரும் யாராக இருப்பினும், வாசலில் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியை தலை குனிந்து வணங்கி தான் செல்ல வேண்டும். அந்த சங்கிலியின் ஒருபுறம் சோமனின் காலிலும், மற்றொரு முனை தூணிலும் கட்டப்பட்டிருக்கும். சங்கிலியை வணங்கி செல்ல விருப்பம் இல்லாதவர்கள் சோமனுடன் மல்யுத்த போட்டியில் பங்கேற்று வென்று செல்ல வேண்டும்.

வீழ்த்திய நல்லமநாயக்கர்

மகாராஜாவைக் காண வரும் மக்கள், குறுநில மன்னர்கள் என அனைவரும் சங்கிலியை வணங்கி சென்றே சாம்பு அரசனை தரிசித்து வந்தனர். ஆனால், நல்லம நாயக்கருக்கு அப்படிச் செல்ல மனம் ஒப்பவில்லை. சோமனுடன் மல்யுத்தம் செய்து சாம்பு மகாராஜாவைக் காணலாம் என முடிவு செய்தார். இதனையடுத்து, ‘சோமனுடன் ஒருவர் மோதப் போகிறாரா?’ எனக் கேள்விப்பட்ட ஊர் மக்கள் அனைவரும் ஆச்சரியத்தின் உச்சிக்கு சென்று, அந்த மல்யுத்த போட்டியைக் காண திரண்டனர்.

ஊர் மக்கள் கூட, சண்டை ஆரம்பமானது. சண்டையைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர் அனைவரும். சண்டையின் முடிவில் நல்லம நாயக்கர், சோமனை மல்யுத்தத்தில் வீழ்த்தினார். இதில் சோமன் கொல்லப்பட்டான். அதன் பின்னர் சாம்பு அரசரைக் காணச் சென்றார் நல்லம நாயக்கர். தான் மாபெரும் மாவீரன் எனக் கருதிக்கொண்டிருந்த சோமனையே வீழ்த்திவிட்டு, தன்னைக் காண வந்த நல்லம நாயக்கரைக் கண்டு வியந்தார் சாம்பு அரசர்.

எட்டயபுரம் அரண்மனை – பழமை மாறாத தற்போதைய தோற்றம்

நல்லம நாயக்கரின் வீரத்தை பாராட்டி, ‘நீங்கள் ஒரு சிறந்த வீரர்’ எனப் புகழ்ந்தார். மேலும், தனக்கு கீழிருந்த சில கிராமங்களையும், பெரும் பரிசு பொருட்களையும் அளித்தார் சாம்பு அரசர். அதே சமயம் சோமனின் தம்பிகள், தங்களது அண்ணனை இழந்து நிராதரவாக நின்றனர்.

‘எட்டப்பன்’ பெயர் காரணம்

சோமனின் தம்பிகளின் நிலை கண்டு சாம்பு அரசரும் மனம் வருந்தினார். இதனைக் கேள்விபட்ட நல்லம நாயக்கர், சோமனின் எட்டு தம்பிகளையும் தானே தத்தெடுத்து வளர்ப்பது என முடிவு செய்தார். அதனை அறிந்து மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்த சாம்பு அரசர், ‘சோமனின் எட்டு தம்பிகளையும் நல்லம நாயக்கர் தத்தெடுத்துக் கொண்டபடியால், அவருக்கு ‘எட்டப்பன்’ எனும் பெயர் சூட்டினார்.

இப்படி கருணையுடன் சோமனின் எட்டு தம்பிகளுக்கும் அப்பனாக ஆனதால் தான், அதன் பிறகு நல்லம நாயக்கரின் பரம்பரைக்கு ‘எட்டப்பன்’ என்ற பெயர் வந்தது” என்று சொல்லி முடித்தவரிடம், “இப்படியான ஒரு பரம்பரை பின்னணி கொண்ட எட்டப்பன் குறித்து எப்படி ‘கட்டபொம்மனை காட்டிக்கொடுத்தார்’ என்ற குற்றச்சாட்டு எழுந்தது?” என வியப்பு மேலிட கேட்டோம்.

அது குறித்தும் பேசிய அவர், ” உண்மையில் கட்டபொம்மன் ஆங்கிலேயர்களால் பிடிக்கப்பட்டதற்கும் எட்டயபுரத்துக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. இது முழுக்க முழுக்க தவறான குற்றச்சாட்டு. ‘வரலாற்று தகவல்’ என்ற பெயரில் நீண்ட காலமாக சொல்லப்பட்டு வந்த முற்றிலும் பொய்யான விஷயம்” என விரிவாக விளக்கினார்.

எட்டயபுர 42 ஆவது பட்டத்து ராஜா திரு. சந்திர சைதன்யா

உண்மை இப்படி இருக்க, இனி யாராவது உங்களிடம் ‘எட்டப்பன்’ குறித்து பழைய கதையையே சொன்னால், அவர்களிடம் நடந்தது என்ன என்பதை விளக்குங்கள். வரும் தலைமுறையினராவது உண்மை வரலாறைத் தெரிந்துகொள்ளட்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Consent to service google ads. בתל אביב – ירדן נערות ליווי באשדוד strip johnny. 7/24 taksi çerkezköy arşivleri Çerkezköy taksi çağır 0533 664 26 77.