சென்னைக்கு அருகில் “டிட்வா” புயல்!

New Project (12)

டிட்வா புயல் சென்னையிலிருந்து 400 கி.மீ. தொலைவில் வலுவடைந்து வருவதால், சென்னை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 4-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி வலுப்பெற்று வரும் டிட்வா புயல் தற்போது சென்னையிலிருந்து தென்கிழக்கில் சுமார் 400 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.

மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்தப் புயல் (நவம்பர் 30) மாலைக்குள் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு நெருக்கமாக வந்தடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக 9 துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 4-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் காரணமாக துறைமுகத்தில் கப்பல்களுக்கு ஆபத்து, கடலோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் 4-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Earn money recurring online by referring others — completely free and simple to use on websites and social media. Just a moment.... heavy equipment transport ventura ca.