ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான் பூச்சி!… மன்னிப்பு கோரிய நிறுவனம்!…

New Project - 2025-08-04T145936.839

சான் பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான் பூச்சி இருப்பதாக இரு பயணிகள் புகார் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகாரைத் தொடர்ந்து, குறிப்பிட்ட பயணிகள் உடனடியாக வேறு இருக்கைகளுக்கு மாற்றப்பட்டனர்.

விமானத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சில சமயங்களில் பூச்சிகள் விமானத்தில் இருப்பதாக ஏர் இந்தியா விளக்கமளித்துள்ளது.ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “விமானத்தில் பயணிகளுக்கு ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டிருந்தால், அதற்காக மன்னிப்பு கோருகிறோம். பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பு எங்களுக்கு முதன்மையானது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், விமானங்களில் தூய்மை மற்றும் பயணிகள் பாதுகாப்பு குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது. பயணிகள், விமான நிறுவனங்கள் தூய்மைப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதற்கு முன்னரும், விமானங்களில் பூச்சிகள் இருப்பது தொடர்பாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், ஏர் இந்தியா இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

For websites and social media. Just a moment.... heavy equipment transport hampden ma.