சென்னை பன்னாட்டு புத்தக காட்சி: தமிழ் இலக்கியங்கள் உலகளாவிய இலக்கியங்களாக மாறுமா?

ப்போது தரமான நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறதோ அப்போது நமது மொழியும் வளம் பெறும். சொற்களும் வலிமை பெறும். புதிய இலக்கியங்கள் மட்டுமல்ல, புதிய சிந்தனைகளும் சொற்களும் கிடைக்கும். காலம்தோறும் புதிய புதிய சொற்கள் உருவானால்தான் மொழியின் காலமும் நீடிக்கும். ஆங்கிலத்தின் இலக்கிய வளமே மொழி பெயர்ப்பாளர்களால்தான் ஏற்பட்டிருக்கிறது என்று தமிழின் மிக சிறந்த எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான க.நா. சுப்பிரமணியன் கூறியிருக்கிறார்.

நம்முடைய தமிழ் இலக்கியங்கள் உலகளாவிய இலக்கியங்களாக மாற வேண்டுமானால், உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். படைப்பிலக்கியத்துக்கு இணையான மதிப்பு மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கும் இருக்கிறது.

அந்த வகையில், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சியையொட்டி பன்னாட்டு புத்தகக் காட்சியும் நடைபெற்று வருகிறது. தமிழ் மொழியின் சிறந்த படைப்புகளை உலக மொழிகளிலும் இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்ய, தமிழ்நாடு அரசால் மொழிபெயர்ப்பு மானியமாக ரூ.3 கோடி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 3 ஆவது சென்னை பன்னாட்டு புத்தக காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உட்பட 64 நாடுகளைச் சேர்ந்த பதிப்பகங்கள் இதில் பங்கேற்றுள்ளன.

இதை தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “தற்போது நடைபெறும் 3 ஆவது பன்னாட்டு புத்தகக் காட்சியில் 64 நாடுகள் பங்கேற்றுள்ளதாகவும், இதன்மூலம் சுமார் 1,000 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்ப்பதாகவும், மாநாட்டின் மூலம் 166 நூல்கள் 32 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டிலுள்ள நூல்கள் உரிமைக்குழு, உலகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்கள், படைப்புலக ஆளுமைகள் மற்றும் வெளியீட்டாளர்களை இணைக்கும் ஒரு தனித்துவமான அமைப்பாக விளங்குவதாகவும், இலக்கிய முகவர் திட்டமும் மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வெளியீட்டாளர்களின் மன்றமான ஆப்பிரிக்க பதிப்பக வலையமைப்பு (APNET), தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் உருவாக்கப்பட்ட குழந்தைகள் புத்தகங்களை ஆங்கிலம் தவிர பல்வேறு ஆப்பிரிக்க மொழிகளில் மொழிபெயர்க்க திட்டமிட்டுள்ளது. பிராங்கோஃபோன் நாடுகளும் இந்தப் புத்தக மொழிபெயர்ப்பில் ஆர்வம் காட்டியுள்ளன.

“ஆரம்பத்தில் சில புத்தகங்களை மொழிபெயர்ப்பதற்கான மானியங்களை நாங்கள் வழங்குவோம். அதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து புத்தக வெளியீட்டாளர்கள் கூடுதல் புத்தகங்களுக்கான உரிமைகளை வாங்குவார்கள் ” என்று சென்னை சர்வதேச புத்தகக் காட்சியின் இணை இயக்குநர் டி. சங்கர சரவணன் கூறினார்.

இந்த நிகழ்வில் பல ஆசிரியர்கள், வெளியீட்டாளர்கள் மற்றும் இலக்கிய முகவர்கள் பங்கேற்றுள்ள நிலையில், இது குறித்துப் பேசிய இலக்கிய முகவரான பீர் முகமது, “சியோல் சர்வதேச புத்தகக் கண்காட்சி (Seoul International Book Fair – SIBF) தொடங்கி கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு, தென் கொரிய எழுத்தாளரான ஹான் காங், இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார். இத்தகைய மைல்கற்களை அடைவதற்கு, தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகளை ஊக்குவிப்பதற்கும், சர்வதேச பார்வையாளர்களைச் சென்றடைவதில் எழுத்தாளர்களை ஆதரிப்பதற்கும் நிலையான முயற்சிகள் தேவை” என்று வலியுறுத்தினார்.

பீர் முகமது கூறுவதுபோல தமிழிலும் மிகச் சிறந்த படைப்பாளர்களின் நூல்கள் தமிழைத் தாண்டி மொழிபெயர்க்கப்படாமல் இருக்கின்றன. அவை மொழிபெயர்க்கப்பட்டு கவனம் ஈர்த்தால், நம்முடைய தமிழ் இலக்கியங்கள் உலகளாவிய இலக்கியங்களாக மாற வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Experienced trauma support. Un реасеkеереrѕ іn lebanon ѕау iѕrаеl hаѕ fіrеd on thеіr bаѕеѕ deliberately. Geld im automaten vergessen.