ரூ.10 லட்சம் வரை வருமான வரி விலக்கு? மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகள்…

WhatsApp Image 2025-01-24 at 12.32.28 PM

ருகிற 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் ஆண்டுதோறும் இந்த அல்வா கிண்டும் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், அல்வா கிண்டும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

இதனிடையே பட்ஜெட் தயாரிப்பு பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்ட நிலையில், பட்ஜெட்டில் என்னென்ன முக்கிய அறிவிப்புகள் இடம்பெற உள்ளன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் மிகவும் எதிர்பார்க்கப்படுவது தனிநபர்களுக்கான வருமான வரி விலக்குக்கான வரம்பு அதிகரிக்கப்படுமா என்பது குறித்து தான். அந்த வகையில், கடந்த ஆண்டு பட்ஜெட்டின்போதே வருமான வரி விலக்குக்கான வரம்பு ​​அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நடுத்தர வர்க்கத்தினரிடையே நிலவியது. ஆனால், அதிகரிக்கப்படவில்லை.

ரூ.10 லட்சம் வரை வருமான வரி விலக்கு

இந்த நிலையில், இந்த ஆண்டு தாக்கல் செய்ய உள்ள 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், ரூ.10 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது உள்ள ​​புதிய வரி விதிப்பு நடைமுறையின் கீழ், ஆண்டுக்கு ரூ.7.75 லட்சம் வரை சம்பளம் வாங்குவோருக்கு எந்த வரியும் இல்லை. ஆண்டுக்கு ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோர், அதிகபட்ச வரி அடுக்கான 30 சதவீதத்தின் கீழ் வருகிறார்கள்

இந்த நிலையில், ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான வருமானத்துக்கான வரி விதிப்பு 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதம் ஆக குறைக்கப்படலாம் என்றும் மத்திய நிதி அமைச்சக வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, ரூ.10 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரியிலிருந்து விலக்கு அளிப்பது மற்றும் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு புதிதாக 25% வரி விதிப்பு அறிமுகப்படுத்துவது என இரண்டு வாய்ப்புகளையும் நிதி அமைச்சகம் பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த 2 அம்சங்களும் அமலுக்கு வந்தால், அரசுக்கு ரூ.50,000 கோடி முதல் ரூ.1 லட்சம் கோடி வரையிலான வருவாய் இழப்பு ஏற்படும். இருப்பினும் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் என்பதால், அதன் மூலம் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என மத்திய அரசு கருதுகிறது. எனவே, பட்ஜெட்டில் மேற்கூறிய வருமான வரி விலக்கு குறித்த அறிவிப்பு நிச்சயம் இடம்பெறும் எனத் தெரிகிறது.

செயற்கை நுண்ணறிவு (AI)

இது தவிர, பட்ஜெட்டில் மற்ற துறை சார்ந்தவர்களும் தங்களுக்கான சாதகமான அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான (MSME) ஊக்குவிப்பு திட்டங்கள் மற்றும் அத்துறைக்கான வரிச்சலுகைகளை அத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

மேலும், பட்ஜெட்டில் கவனிக்கப்படும் மற்றொரு முக்கிய அம்சம் செயற்கை நுண்ணறிவு (AI).ஏஐ தொழில்நுட்பத்தினால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் அதன் பயன்பாட்டை செயல்படுத்துவதற்கான திட்டங்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விஷயத்தில் வேலை இழப்புகள் குறித்து கவலை உள்ளது. ஆனால் செயற்கை நுண்ணறிவு நிலைத்திருக்கும் என்ற யதார்த்தத்தையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. இந்திய நிறுவனங்கள் உலகளாவிய நிறுவனங்களின் வேகத்துக்கு ஈடாக போட்டிப்போடுவதை உறுதி செய்வதற்காக, இந்தத் துறைக்கான நன்மைகள் பட்ஜெட்டில் நிச்சயம் இடம்பெறும் என்றும் தெரிகிறது.

சுகாதாரம், காப்பீடு

2023-24 ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையின்படி, 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 1.9 சதவீதமாக இருந்த பொது சுகாதார செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ( GDP) குறைந்தபட்சம் 2.5 சதவீதமாக மோடி அரசு உயர்த்தும் என்றும் சுகாதார துறை நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும், அனைத்து குடிமக்களுக்கும் காப்பீட்டை விரிவுபடுத்தும் நோக்கில், சுகாதார காப்பீட்டில் அதிக பங்கேற்புக்கு இந்தியர்களை ஊக்குவிக்க கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தொடக்க நிறுவனங்கள் உட்பட சுகாதாரம் மற்றும் மருந்தகத்தில் பல துறைகள் இதற்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.

மலிவு விலையில் புற்றுநோய் மருந்துகள், தொழில்நுட்பங்கள்

கடந்த பட்ஜெட்டின் போது, ​​நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புற்றுநோய் மருந்துகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மூன்று மருந்துகளான டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான், ஒசிமெரிடினிப் மற்றும் துர்வாலுமாப் ஆகியவற்றுக்கான சுங்க வரிகளில் முழு விலக்கு அளிப்பதாக அறிவித்தார்.

இந்த ஆண்டும் மத்திய அரசு அதே போக்கைப் பின்பற்றி, புற்றுநோய் மருந்துகள் மற்றும் சிகிச்சையை மலிவு விலையில் வழங்க கூடுதல் தளர்வுகளை அறிவிக்கும் என நிறுவனங்கள் மற்றும் புற்றுநோயியல் நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

乌龙茶. International social service hong kong branch. Yes, many smart devices collect data to improve user experience.