நயன்தாரா ஆவணப்படத்துக்கு மேலும் ஒரு வழக்கு!

New Project (89)

நயன்தாராவின் ஆவணப்படமான ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடேல்’ படத்தில், ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி, அதற்குத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

‘சந்திரமுகி’ படத்தின் பதிப்புரிமையை வைத்திருக்கும் ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம், ஆவணப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான டூயல் டோன் எண்டர்டெயின்மென்ட் மற்றும் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.விசாரணையின்போது, ஏபி இண்டர்நேஷனல் தரப்பில், ‘சந்திரமுகி’ படத்தின் காட்சிகளை பயன்படுத்துவதற்கு எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை என வாதிடப்பட்டது.

இதனை கவனத்தில் கொண்ட நீதிமன்றம், ஆவணப்பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் ஆகியவை இரு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணை இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த ஆவணப்படம், நயன்தாராவின் திரைப் பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை மையமாகக் கொண்டு, நவம்பர் 2024 இல் நெட்ஃபிலிக்ஸில் வெளியானது. இதற்கு முன்னரும், ஆவணப்படத்தில் சில காட்சிகளைப் பயன்படுத்தியது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போது புதிய வழக்கு கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

essential tools for website and social media. Just a moment.... Heavy equipment transport hampden ma.