king this back! குகேஷையை வீழ்த்தி ஆனந்த் அதிரடி வெற்றி!

New Project - 2025-12-17T110744.741

மும்பையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ராயல் ஓபரா ஹவுஸில் நடைபெற்று வரும் டெக் மஹிந்திரா குளோபல் சதுரங்க லீக்கில் (Global Chess League), உலகமே எதிர்பார்த்த ஒரு த்ரில்லிங் மோதல் அரங்கேறியது. இதில் ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், தற்போதைய இளம் உலக சாம்பியனான டி. குகேஷை எதிர்கொண்டு சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தார்.

வெள்ளை நிறக் காய்களுடன் கங்கை கிராண்ட்மாஸ்டர்ஸ் அணிக்காகக் களம் இறங்கிய ஆனந்த், ‘சிசிலியன் டிபென்ஸ்’ (Sicilian Defense) முறையில் ஆட்டத்தைத் தொடங்கினார். ஆட்டத்தின் இறுதிவரை (Endgame) மிகத் தீவிரமாகச் சென்ற இந்தப் போட்டியில், ஆனந்த் 95.6% துல்லியத்துடன் காய்களை நகர்த்தி, பிபிஜி அலாஸ்கன் நைட்ஸ் அணியின் குகேஷை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் கங்கை கிராண்ட்மாஸ்டர்ஸ் அணி 12-3 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றி பெற்றது. இது இந்த சீசனில் அந்த அணி பெற்ற இரண்டாவது வெற்றியாகும். அதே சமயம், குகேஷின் பிபிஜி அலாஸ்கன் நைட்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியைச் சந்தித்தது.

வெற்றிக்குப் பிறகு பேசிய விஸ்வநாதன் ஆனந்த், “குகேஷின் ஆக்ரோஷமான ஆட்டம் என்னைக் கூர்மையாக (Sharp) வைத்திருக்க உதவுகிறது” என்று தனது இளம் சீடரைப் பாராட்டிப் பேசினார். சுமார் 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில், இந்த வெற்றியின் மூலம் கங்கை அணி புள்ளிப் பட்டியலில் நடுத்தர நிலைக்கு முன்னேறியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Consent to service google ads. צפון והסביבה – ניקיטה – תמונה 6. Veliköy mahallesi taksi – Çerkezköy 7/24 taksi hizmeti.