வங்கு கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; புயலாக மாறுமா? – வெதர்மேன் கொடுத்தா அலர்ட்
நாளை மறுநாள் உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுக்கூடுமா என்பது குர்ரித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இம்மாத தொடக்கத்தில் சற்று மந்தமாக இருந்தாலும், கடந்த 3 நாட்களாக மாநிலம் முழுவதும் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், வரும் 22-ஆம் தேதி இலங்கைக்கு அருகிலுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த அமைப்பு இன்னும் வலுப்பெறக்கூடும்! இதன் தாக்கத்தால் நாளை (21-11-2025) முதல் 24-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 4 நாட்கள் தொடர்ந்து பரவலான மழை பெய்யும் என வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
மேலும், 24-ஆம் தேதி மற்றொரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது. 22-ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு புயலாக மாறுமா, அல்லது அடுத்து வரவிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வளருமா என்பதை இப்போது சொல்ல முடியாது. இது பற்றிய தெளிவான விவரம் 26-ஆம் தேதிக்குப் பிறகே கிடைக்கும் என வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
