‘காட்ஸிலா’ எல்-நினோ: கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு!

New Project (85)

பசுபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள ‘காட்ஸிலா’ எல்-நினோ நிகழ்வினால், உலக அளவில் இந்த ஆண்டில் கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

பசுபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட உயரும்போது ‘எல்-நினோ’ உருவாகிறது. இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள எல்-நினோ நிகழ்வின் தாக்கம் வழக்கத்தை விட மிகத் தீவிரமாக இருக்கும் என்பதால், இது ‘காட்ஸிலா’ எல்-நினோ என்று அழைக்கப்படுகிறது.

இதன் காரணமாக, உலகெங்கிலும் மழைப்பொழிவு முறையில் மாற்றம், வறட்சி, தீவிர வெள்ள அபாயம் மற்றும் வெப்பநிலை உயர்வு போன்ற காலநிலை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. வானிலை தரவுகளின்படி, கடந்த 150 ஆண்டுகளில் பதிவான வெப்பமான ஆண்டுகளில் இந்த ஆண்டும் ஒன்றாக இருக்கக்கூடும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *