IPL 2025 சாம்பியன்ஸ் RCB விற்பனைக்கு!
IPL 2025-ல் முதல்முறையாக கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியை அதன் உரிமையாளர்கள் Diageo விற்பனைக்கு வைத்துள்ளனர். IPL மற்றும் Women’s Premier League (WPL) ஆகிய இரண்டிலும் விளையாடும் RCB-யின் விற்பனை செயல்முறையை Diageo அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. 2026 மார்ச் 31க்குள் இந்த ஒப்பந்தம் முழுமையாக முடிவடையும் என நிறுவனம் நம்பிக்கை தெரிவிக்கிறது.
2008 முதல் IPL-ல் பங்கேற்று வரும் RCB, 2025-ல் வரலாற்று வெற்றியை பெற்றது. மேலும், பெண்கள் பிரீமியர் லீக் 2024-லும் RCB சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அணியில் விராட் கோலி, ஸ்மிருதி மந்தனா, ஜோஷ் ஹேசல்வுட் போன்ற பெரிய நட்சத்திரங்கள் உள்ளனர்.
RCB-க்கு USD 2 பில்லியன் மதிப்பு?
United Spirits Limited-ன் தலைமை நிறுவனமான Diageo, RCB-க்கு சுமார் USD 2 பில்லியன் மதிப்பை எதிர்பார்க்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024–25 நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த லாபத்தில் விளையாட்டு துறை மட்டும் 8.3% பங்காற்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், “வாக்சின் கிங்” என அழைக்கப்படும் அதார் பூனாவாலா RCB-யை வாங்க தீவிரமாக ஆர்வம் காட்டுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.விற்பனை செயல்முறை நடந்து கொண்டிருந்தாலும், RCB அணி வரும் நவம்பர் 27-ம் தேதி நடைபெறும் WPL ஏலத்தில் பங்கேற்க இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
BSE-க்கு அனுப்பிய அறிவிப்பு!
பம்பாய் பங்குச் சந்தைக்கு (BSE) அனுப்பிய அறிவிப்பில், Diageo இந்த நடவடிக்கையை “Strategic Review of Investment in Royal Challengers Sports Pvt Ltd (RCSPL)” என குறிப்பிடப்பட்டுள்ளது.“RCSPL நிறுவனத்தின் கீழ், ஆண்கள் IPL மற்றும் பெண்கள் WPL ஆகிய போட்டிகளில் பங்கேற்கும் RCB அணிகள் உள்ளன. RCSPL மீது முதலீட்டை மீளாய்வு செய்யும் பணியை USL தொடங்கியுள்ளது.”அறிவிப்பில் மேலும்,“முழு செயல்முறை 2026 மார்ச் 31-க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என கூறப்பட்டுள்ளது.
United Spirits Ltd MD & CEO பிரவீன் சோமேஷ்வர் தெரிவித்ததாவது:
“RCSPL எங்களுக்கான முக்கிய சொத்து என்றாலும், அது எங்கள் முக்கிய அல்கோபெவ் (ஆல்கஹால் & பெவரேஜ்) வணிகத்திற்குச் சார்பானது அல்ல.அனைத்து பங்குதாரர்களுக்கும் நீண்டநாள் மதிப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டது,” என்றார்.
