சென்னையை குளிர்வித்த கோடை மழை… வெப்ப அலையிலிருந்து நிவாரணம்!

Chennai Rain 1200

லைநகர் சென்னையில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் தகித்து, மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று புதன்கிழமை காலை பல்வேறு பகுதிகளில் இலேசான மழை பெய்து குளிர்ச்சியைப் பரப்பியுள்ளது.

சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை, மெரினா, பட்டினப்பாக்கம், அடையாறு, மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த திடீர் மழையால் வெப்பம் ஓரளவு தணிந்து, நகரில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

இருப்பினும், இந்த மழை மக்களின் இயல்பு வாழ்க்கையில் சில பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகங்களுக்குச் செல்லும் ஊழியர்கள் மழையால் போக்குவரத்து சிரமங்களை எதிர்கொண்டனர். முக்கிய சாலைகளில் ஏற்பட்ட நீர்தேக்கம் மற்றும் வாகன நெரிசல் காரணமாக பயணிகள் பலர் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக, இரு சக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஈரோடு, சேலம், தருமபுரி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 12 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த மூன்று மணி நேரங்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை தொடரலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 21 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த மழை கோடை வெப்பத்தை தணிக்க உதவினாலும், வெப்பநிலை இன்றும் நாளையும் 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரலாம். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் சென்னையில் கோடை மழை அவ்வப்போது பெய்தாலும், இந்த ஆண்டு மழையின் தீவிரம் மற்றும் அதன் தாக்கம் குறித்து மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வானிலை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

essential tools for website and social media.