நவம்பர் 1 முதல் ஆதார் அட்டையில் அதிரடி மாற்றங்கள்!

New Project (3)

இந்தியர்களின் முக்கியமான அடையாள ஆவணமான ஆதார் அட்டையில் நவம்பர் 1 முதல் பெரிய மாற்றங்கள் அமலாக உள்ளன. யூனிக் ஐடென்டிபிகேஷன் ஆத்தாரிட்டி ஆஃப் இந்தியா (UIDAI) அறிமுகப்படுத்தும் புதிய வசதிகளின் மூலம், ஆதார் தகவல்களை புதுப்பிப்பது மேலும் எளிதாகிறது.

புதிய மாற்றங்கள்:
இனி ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்றவற்றை ஆன்லைனில் மாற்றிக்கொள்ள முடியும். இதற்காக எந்த ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை. UIDAI அமைப்பு தானாகவே பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், ரேஷன் அட்டை, பிறப்பு சான்றிதழ் போன்ற அரசு தரவுத்தளங்களில் இருந்து தகவல்களை சரிபார்த்துக் கொள்ளும்.
முன்பு வரை முகவரி மட்டுமே ஆன்லைனில் மாற்ற முடியுமானால், இப்போது பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் போன்றவற்றையும் வீட்டிலிருந்தே மாற்றலாம். ஆனால் கைவிரல் ரேகை, கருவிழி, புகைப்படம் போன்ற பயோமெட்ரிக் விவரங்களை மாற்ற ஆதார் சேவை மையத்துக்குச் செல்ல வேண்டும்.

கட்டண மாற்றங்கள்:பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல், மின்னஞ்சல் அப்டேட் – ₹75 (முன்பு ₹50),பயோமெட்ரிக் அப்டேட் – ₹125 (முன்பு ₹100),குழந்தைகளின் பயோமெட்ரிக் அப்டேட்டுக்கு கட்டணம் இல்லை.

மேலும், பான் மற்றும் ஆதார் இணைப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள் இணைக்காவிட்டால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மற்றும் டீமேட் கணக்குகள் முடக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ai blog : create content automatically and earn. Just a moment.... heavy equipment transport hampden ma.