அடுத்த விஜய்யா சிவகார்த்திகேயன்? – ரசிகர்களுடன் நடந்த சந்திப்பு பின்னணி…

vijay - siva

டிகர் விஜய் புதிய கட்சியைத் தொடங்கி அரசியலுக்குள் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களை சென்னையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் திடீரென சந்தித்திருப்பது, அடுத்த விஜய் ஆவதற்கான அடித்தளமா என கோலிவுட்டில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் சிவகார்த்திகேயன். முதல் படமான ‘மெரினா’ ஓரளவு கவனம் ஈர்த்த நிலையில், அடுத்தடுத்த படங்கள் மூலம் தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். பக்கத்து வீட்டு பையன் தோற்றத்தில், பெரிய அளவில் ஹீரோயிசம் காட்டாமல், நகைச்சுவை கலந்த வேடங்களில் அவர் நடித்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், ‘ரெமோ’ , ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ போன்ற படங்கள் எல்லாம் அவருக்கு பெண் ரசிகைகளையும் சிறு வயது ரசிகர்களையும் பெற்றுத் தந்தது.

மாஸ் ஹீரோக்களுக்கு நிகரான வசூல்

தொடர்ந்து வேலைக்காரன், கனா, சீமராஜா, டாக்டர், டான் போன்ற படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்று அவரை முன்னணி நட்சத்திரமாக மாற்றியது. அந்த வகையில், பொங்கலுக்கு வெளியான ‘அயலான்’ படமும் வசூலை அள்ளியது. அவரது இந்த கிடுகிடு வளர்ச்சி, தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களான விஜய், அஜித், சூர்யா போன்றோரின் பாக்ஸ் ஆபீஸ் வசூலுக்கு நிகராக வசூல் ஈட்ட வைக்கிறது.

இந்த நிலையில், தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தயாராகி வரும், காஷ்மீரில் பணியாற்றிய துணிச்சல் மிக்க ராணுவ அதிகாரி ஒருவரின் கதையை அடிப்படையாக கொண்ட ‘அமரன்’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், ‘அமரன்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை நெட் ஃபிளிக்ஸ் 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது பரபரப்பாக பேசப்பட்டது. சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக விலை கொடுத்து ஓடிடி- யில் வாங்கப்பட்ட படம் என்ற பெருமையை ‘அமரன்’ பெற்றுள்ளது.

நடிப்பிலிருந்து விலகும் விஜய்

இந்த நிலையில்தான், தமிழ் சினிமாவில் முன்னணியில் உள்ள நடிகர் விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி உள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது நடித்து வரும் ‘கோட்’ படத்தைத் தொடர்ந்து, அடுத்ததாக ஒரு படத்துடன் சினிமாவிலிருந்து முற்றிலும் விலகப்போவதாக அறிவித்து விட்டார் விஜய்.

இதனால் விஜய், அஜித்துக்கு அடுத்த இடத்தில் உள்ள தனுஷ், சிம்பு, சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரில், விஜய் இடத்தை அடுத்து பிடிக்கப்போவது யார் என்பதுதான் கோலிவுட்டில் தற்போது ஹாட் டாபிக்காக விவாதிக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும், இப்போட்டியில் சிவகார்த்திகேயனே முன்னணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கு முக்கிய காரணமாக முன்வைக்கப்படுவது, “ரஜினி, விஜய் ஆகியோருக்கு எப்படி சிறுவயதினர், பெண்கள் என அனைத்து தரப்பினரும் ரசிகர்களாக இருந்தார்களோ அதேபோன்றுதான் தற்போது சிவகார்த்திகேயனுக்கும் உள்ளனர்” என்பதுதான்.

அடுத்த தளபதியா?

அதுமட்டுமல்லாது, “சிவகார்த்திகேயன் தொடர்ந்து விஜய்யை வைத்து இயக்கிய இயக்குநர்களுடனேயே படங்களில் நடித்து வருகிறார். ஏ.ஆர். முருகதாஸ், வெங்கட்பிரபு என அவர் அடுத்தடுத்து தேர்ந்தெடுத்துள்ள இயக்குநர்களின் பட்டியலைப் பார்த்தால், விஜய் இடத்தைப் பிடிப்பதற்கான ரூட்டில் பயணிப்பது தெளிவாக தெரிகிறது” என்கிறார்கள் திரையுலக விமர்சகர்கள்.

இந்த நிலையில்தான், ‘அடுத்த தளபதி’ யாக தன்னை முன்னிறுத்தும் வகையில், சென்னை , போரூரில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்தும் வந்த தனது ரசிகர்களை நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த ‘பான்’ சந்திப்பில் ( Pan’s meet) தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் வந்து குவிந்தனர். இந்த சந்திப்பில், நடிகர் விஜய்க்கு கிடைத்த வரவேற்புக்கு ஈடாக சிவகார்த்திகேயனுக்கும் கிடைத்துள்ளது.

இந்த ரசிகர் சந்திப்பு காணொளியைப் பார்த்த ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும், “அடுத்த தளபதியாக சிவகார்த்திகேயன் உருவெடுத்தால், அதில் ஆச்சரியப்பட எதுவுமே இல்லை” எனத் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதே சமயம், நடிகர் விஜய் போன்றே சிவகார்த்திகேயனின் நற்பணி மன்றமும் செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Während chorweiler spart, redet die spd weiter von olympia – kommentar. Consent to service google ads. legal entity information.