அமெரிக்காவில் அரசு முடக்கம்!
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அரசு முடக்கம் (Government Shutdown) நாடு முழுவதும் விமானப் போக்குவரத்தை கடுமையாக பாதித்துள்ளது. இன்று மட்டும் 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல விமானங்கள் நேரம் மாற்றப்பட்டு, தாமதமாக புறப்படுகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கின்றனர்.
40 முக்கிய விமான நிலையங்களுக்கு FAA உத்தரவு-அமெரிக்காவின் மத்திய விமான நிர்வாகமான FAA (Federal Aviation Administration), பணியாளர் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் அதிகரித்துள்ளதால், 40 முக்கிய விமான நிலையங்களில் விமான சேவைகளை கட்டுப்படுத்தவும், சில விமானங்களை ரத்து செய்யவும் அவசர அறிவிப்பு பிறப்பித்துள்ளது.
அரசு முடக்கம் ஏற்பட்டதால்,விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள்,பாதுகாப்பு சோதனை பணியாளர்கள்,தரை பராமரிப்பு குழு,நிர்வாக ஊழியர்கள் இவர்களில் பலர் சம்பளம் வழங்கப்படாத நிலை காரணமாக பணிக்கு வர முடியாமல் உள்ளனர்.
இதனால் விமானங்கள் இயக்கத்திற்கு தேவையான குறைந்தபட்ச பணியாளர்கள் கூட இல்லாத நிலை உருவாகியுள்ளது. பாதுகாப்பு பிரச்னைகள் அதிகரிக்கக்கூடும் என்ற காரணத்தால் FAA பல விமானங்களை ரத்து செய்துள்ளது.
பயணிகள் கடும் சிக்கலில்- இரவு முழுவதும் வரிசையில் நின்று பயணிகள் மாற்று விமானம் தேடும் நிலை காணப்படுகிறது. சிலர் அருகிலுள்ள மாநிலங்களுக்கு சாலை வழியாகப் பயணம் செய்வதற்கும் . ஹோட்டல்கள் மற்றும் ரயில் சேவைகளும் அதிக நெரிசலை சந்தித்து வருகின்றன.
நிலையை சரிசெய்ய பேச்சுவார்த்தை- அரசு முடக்கம் நீடித்தால், விமானப் போக்குவரத்து மேலும் கடுமையாக பாதிக்கப்படும் என FAA எச்சரித்துள்ளது. நிலையை சீர்படுத்த அமெரிக்க அரசு மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அவசர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
