சட்டசபையில் மாநில சுயாட்சி தீர்மானம்: மத்திய அரசுக்கு அடுத்த அழுத்தம்?

ந்து நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை செவ்வாய்க்கிழமை அன்று மீண்டும் கூடியது. இன்றைய சட்டசபை கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த மாநில சுயாட்சி தீர்மானம் அரசியல் களத்தில் அடுத்த புயலை கிளப்பியுள்ளது.

சமீபத்தில் தான், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழக அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம், ஆளுநர், தமிழக அரசு அனுப்பிய10 மசோதாக்களுக்கு ஒப்புதல் மறுத்தது “சட்டவிரோதமானது” எனத் தீர்ப்பளித்து, மாநில சட்டமன்றங்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்தியது.

இதற்கு முன்னர், மாநில உரிமைகளை வலியுறுத்தும் வகையில் இருமொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு எதிர்ப்பு போன்ற தீர்மானங்களை முதலமைச்சர் கொண்டுவந்துள்ளார். இந்தப் பின்னணியில், மாநில சுயாட்சி தீர்மானத்தின் நோக்கம், அதன் தேவை, மற்றும் அதன் தாக்கங்கள் என்னவாக இருக்கும் என்பது குறித்த ஓர் அலசல் இங்கே…

தீர்மானத்தின் பின்னணி

மாநில சுயாட்சி கோரிக்கை தமிழகத்தில் புதியதல்ல; இது திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோரிக்கைகளில் ஒன்றாகும். 1974 ஆம் ஆண்டு, மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, ராஜமன்னார் கமிட்டி பரிந்துரைகளை முன்வைத்து மாநில சுயாட்சி குறித்து விரிவான விவாதங்களைத் தொடங்கினார். அவரது காலத்தில், மாநிலங்களுக்கு அதிகாரப் பகிர்வு மற்றும் நிதி சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக எழுப்பப்பட்டன.

இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் சார்பு நடவடிக்கைகளுக்கு எதிரான, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆயுதமாக்கி இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தார் என்றே பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்றம், ஆளுநரின் தாமதங்கள் “நல்லெண்ணமற்றவை” எனவும், அவர் மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம் எனவும் தீர்ப்பளித்தது. இது, தமிழக அரசின் மசோதாக்களைத் தடுத்து, மத்திய அரசின் கைப்பாவையாக ஆளுநர் செயல்படுவதாகக் கூறிய திமுக-வின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியது. இந்த வெற்றி, கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் போன்ற பாஜக ஆளாத மாநிலங்களை ஒருங்கிணைத்து, மத்திய அரசின் அதிகார மையப்படுத்தலுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், மாநில சுயாட்சி தீர்மானம், தமிழகத்தின் உரிமைகளை மட்டுமல்ல, இந்தியாவின் கூட்டாட்சி முறையையே பாதுகாக்கும் முயற்சியாக உருவெடுக்கிறது.

திமுக-வின் அரசியல் உத்தி

மாநில சுயாட்சி தீர்மானத்தின் முக்கிய நோக்கம், இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பைப் பாதுகாப்பதாகத் தெரிகிறது. மத்திய அரசின் அதிகார மையப்படுத்தல் முயற்சிகள், மாநிலங்களின் சுயாட்சியை படிப்படியாகக் குறைத்து வருகின்றன. ஜி.எஸ்.டி. அறிமுகத்தால் மாநிலங்களின் வருவாய் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன, மேலும் கல்வி, சுகாதாரம், வேளாண்மை போன்ற மாநிலப் பட்டியல் விஷயங்களில் மத்திய அரசின் தலையீடு அதிகரித்து வருகிறது.

உதாரணமாக, தேசிய கல்விக் கொள்கை (NEP) மற்றும் மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே மொழி’ என்ற கருத்தாக்கம், மாநிலங்களின் மொழி மற்றும் கலாசார அடையாளங்களை அச்சுறுத்துவதாக உள்ளன. இந்நிலையில், மாநில சுயாட்சி தீர்மானம் மூலம், மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்க மு.க.ஸ்டாலின் முயல்கிறார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக மக்களின் உணர்வுகளை ஒருங்கிணைப்பதற்கும், திமுக-வின் மாநில உரிமைக் கொள்கையை மேலும் வலுப்படுத்துவதற்கும் இது ஒரு முக்கிய அரசியல் உத்தியாகவும் அமையலாம். தமிழ் மொழி, கலாசாரம், மற்றும் உரிமைகளைக் காக்கும் கட்சியாக திமுக-வை மக்கள் மேலும் அடையாளப்படுத்த இந்தத் தீர்மானம் உதவும்.

தாக்கங்கள் என்னவாக இருக்கும்?

இது குறித்துப் பேசும் அரசியல் பார்வையாளர்கள், “மாநில சுயாட்சி தீர்மானம் தமிழக அரசியலிலும், தேசிய அளவிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. முதலாவதாக, இது மத்திய-மாநில உறவுகள் குறித்து ஒரு பரந்த விவாதத்தைத் தூண்டும். மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களும் இதே கோரிக்கையை முன்வைத்து, கூட்டாட்சி முறைக்கு ஆதரவான ஒரு இயக்கத்தை உருவாக்கலாம். இது மத்திய அரசின் ஒருதலைப்பட்சக் கொள்கைகளுக்கு எதிராக ஒரு கூட்டு எதிர்ப்பாக வளர வாய்ப்புள்ளது.

இரண்டாவதாக, தமிழகத்தில் இது திமுக-வின் ஆதரவு அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும். தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக இதனை மக்கள் பார்க்கலாம், இது திமுகவு-க்கு அரசியல் ஆதாயமாக அமையலாம். மேலும், இளைஞர்கள் மத்தியில் மாநில உரிமைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும். இது நீண்டகால அரசியல் உணர்வைத் தூண்டும்.

ஆனால், இந்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்புகளும் எழலாம். எதிர்க்கட்சிகள், குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக, இதனை பிரிவினைவாதக் கருத்தாகச் சித்தரிக்க முயலலாம், இது அரசியல் மோதல்களைத் தூண்டக்கூடும். மத்திய அரசு இதனை ஒரு சவாலாகக் கருதி, தமிழகத்துக்கு எதிரான நிதி அல்லது நிர்வாக நடவடிக்கைகளை மறைமுகமாக மேற்கொள்ளலாம்.

அதே சமயம் மாநில சுயாட்சி தீர்மானம், தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் ஒரு முக்கிய முயற்சி என்றே சொல்ல வேண்டும் இருப்பினும், இதன் வெற்றி, மக்களின் ஆதரவு, பிற மாநிலங்களின் ஒத்துழைப்பு, மற்றும் மத்திய அரசின் எதிர்வினைகளைப் பொறுத்தே அமையும். தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க இது ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கலாம், ஆனால் இலக்கை அடைய நீண்ட மற்றும் சவாலான பயணம் தேவைப்படும்” என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dprd kota batam. Diversity of  private yachts for charter around the world. Here is a sneak peek at  tomorrow night’s masterchef junior on fox.