“நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெறும்” – அமைச்சார் கிரண் ரிஜிஜூ

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக நடைபெறும் கூட்டத்தொடர் ஆகும். இந்த அறிவிப்பு இன்று மதியம் 2:38 மணியளவில் வெளியிடப்பட்டது.

இந்த கூட்டத்தொடரில் முக்கிய விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாகவும், பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தம் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா கூட்டணி, ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டத்தொடரை கோரி வருவதாகவும் கூறப்படுகிறது.

மழைக்கால கூட்டத்தொடர் சுமார் 23 நாட்கள் நடைபெறும். இதில் பல முக்கிய மசோதாக்கள் மற்றும் அரசியல் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும். நாடாளுமன்ற அமர்வுகள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைதளங்களில் இது குறித்து பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த கூட்டத்தொடர் அரசியல் ரீதியாக முக்கியமானதாக இருக்கும் என்று பலரும் கருதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

But іѕ іt juѕt an асt ?. Integrative counselling with john graham. professionelle dienstleistungen für eine gepflegte umgebung und saubere räume.