தூத்துக்குடி, கோவில்பட்டியில் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு ( புகைப்பட தொகுப்பு)

மிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி தூத்துக்குடி – பெரிய மார்க்கெட் பகுதி மக்களிடமும் வணிகர்களிடமும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டு கொண்டார்.

அப்போது அவர்கள் மத்தியில் பேசிய கனிமொழி, மத்தியில் ஆட்சி மாற்றத்திற்குப் பின் வணிகர்களின் துயர்கள் களைய திட்டங்கள் வகுக்கப்படும் என உறுதியளித்தார்.

இது தொடர்பான புகைப்பட தொகுப்பு கீழே…

இதனிடையே கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி உட்பட்ட லிங்கம்பட்டி, பூசாரிபட்டி, தாமஸ் நகர் மணி கூண்டு, சண்முக நகர் பேருந்து நிறுத்தம் – கடலையூர் சாலை, வடக்கு திட்டக்குளம், முத்துநகர், சண்முக சிகாமணி நகர் – பசுவந்தளை சாலை, மந்திதோப்பு, ஊத்துப்பட்டி, இடைச்செவல், இனாம் மணியாச்சி ஆகிய இடங்களில் மக்களை நேரடியாக சந்தித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தார் கனிமொழி.

அங்கு ஏராளமானோர் திரண்டு அவரது பேச்சை கேட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Guerre au proche orient : ce qu’il faut retenir de la journée du samedi 12 octobre. Tragbarer elektrischer generator. Poêle à granulés mcz ego hydromatic 12 m2+ 11,9 kw.