Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

விழுப்புரம் ஆற்றுத் திருவிழா: தென்பெண்ணை கரையில் திரண்ட மக்கள் கடல்!

New Project (1)

விழுப்புரம் பிடாகம் தென்பெண்ணை ஆற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற புகழ்பெற்ற ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.


விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து நடைபெறும் புகழ்பெற்ற தென்பெண்ணை ஆற்றுத் திருவிழா, இன்று பல்லாயிரக்கணக்கான மக்களின் வருகையோடு கோலாகலமாக நடைபெற்றது.

இந்தத் திருவிழாவையொட்டி, விழுப்புரம் பிடாகம் மற்றும் கடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்பட்ட சுவாமி சிலைகள் மேளதாளங்கள் முழங்க ஆற்றங்கரைக்குக் கொண்டு வரப்பட்டன. ஆற்றில் சுவாமிக்குச் சிறப்புத் ‘தீர்த்தவாரி’ மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

தென்பெண்ணை ஆற்றில் சமீபத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது நீர் வடிந்துள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆற்றில் இறங்கிக் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததால், போலீசார் படகுகள் மூலம் ஆற்றில் ரோந்து பணியில் ஈடுபட்டுப் பாதுகாப்பை உறுதி செய்தனர்.

ஆற்றங்கரை முழுவதும் ராட்டினங்கள், விதவிதமான கடைகள் என ஒரு பெரிய திருவிழா சந்தையே உருவானது. குடும்பம் குடும்பமாக மக்கள் திரண்டதால் அந்தப் பகுதியே விழாக்கோலமாகக் காட்சியளித்தது.

இயற்கையையும் நீர்நிலைகளையும் போற்றும் நமது பாரம்பரியமிக்க இந்த ஆற்றுத் திருவிழா, இந்த ஆண்டும் மிகச் சிறப்பாக அரங்கேறியுள்ளது.

Exit mobile version