Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

சென்னையில் அமெரிக்க துணை தூதரகம் முற்றுகை: மஜக போராட்ட அறிவிப்பு!

New Project (81)

மத்திய கிழக்கில் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு அமெரிக்கா துணை நிற்பதாகக் குற்றம்சாட்டி, மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் ஜூன் 20, 2025 அன்று சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என மஜக தலைவர் தமிமுன் அன்சாரி அறிவித்தார்.

இஸ்ரேலின் தொடர் நடவடிக்கைகள் மத்திய கிழக்கில் போரைத் தூண்டுவதாகவும், மனித உரிமை மீறல்களுக்கு அமெரிக்காவின் ஆதரவு பதற்றத்தை மேலும் அதிகரிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். “இஸ்ரேலின் அராஜகங்களை கண்டித்து, அமெரிக்காவின் இரட்டை வேடத்திற்கு எதிராக இப்போராட்டம் நடைபெறும்,” என அன்சாரி தெரிவித்தார்.

பாலஸ்ரீன மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேல்-ஈரான் மோதல் உள்ளிட்ட மத்திய கிழக்கு பதற்றத்தைத் தணிக்க உலகளவு நடவடிக்கை தேவை என வலியுறுத்தவும் இப்போராட்டம் நடைபெறவுள்ளது. சென்னை காவல்துறை, இதற்கு அனுமதி அளிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதற்கு முன், மஜக மற்றும் தமுமுக போன்ற அமைப்புகள் இஸ்ரேலுக்கு எதிராக தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளன.

Exit mobile version