Amazing Tamilnadu – Tamil News Updates

தமிழக பட்ஜெட்: சென்னைக்கான புதிய திட்டங்கள் என்ன?

மிழக சட்டசபையில் இன்று 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

அவர் தனது பட்ஜெட் உரையில், சென்னைக்காக பல்வேறு புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

” சென்னைக்கு அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் உலகத் தர வசதிகளுடன் ஒருங்கிணைந்த புதிய நகரம் அமைக்கப்படும். சென்னையுடன் அந்த புதிய நகரத்தை இணைக்க விரிவான போக்குவரத்து வசதிகள் செய்யப்படும்.

ரூ.100 கோடியில் சென்னை அறிவியல் மையம் அமைக்கப்படும்.

சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் ரூ.88 கோடியில் அமைக்கப்படும்.

40 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் ரூ.675 கோடியில் மறுசீரமைப்பு செய்யப்படும்.

சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகத்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம். ரூ.2423 கோடி நிதி ஒதுக்கீடு.

வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ நீளத்திற்கு ரூ.310 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும்.

கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் ரூ. 70 கோடியில் அமைக்கப்படும்.

கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில், 21 மெகாவாட் திறன் கொண்ட திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி ரூ.3450 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்.

12 வட சென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.6,858 கோடி நிதி ஒதுக்கீடு.

தொழிலாளர் நலன்

திசையன்வினை, ஏம்பல், சாலவாக்கம், செம்பனார்கோவில், தா.பழுர், உத்திரகோசமங்கை, மணப்பாறை, காங்கேயம், குறுக்கள்பட்டி, திருச்செங்கோடு ஆகிய 10 இடங்களில் தலா 4 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் ரூ.152 கோடியில் துவக்கப்படும். இதன் மூலம் 1308 மாணவர்கள் பயனடைவார்கள்.

கிருஷ்ணகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பரங்குன்றம், மண்ணச்சநல்லூர், பேரூர், காரியமங்கலம் ஆகிய இடங்களில் விடுதி வசதியுடன் 7 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் ரூ.148 கோடியில் துவக்கப்படும்.

40 வயதிற்கு மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு முழு உடல் பரிசோனை செய்வதற்கு மருத்துவ பரிசோனை அட்டை வழங்கப்படும்.

2000 இணையம் சார்ந்த சேவைப் பணித் தொழிலாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் மானியத்துடன் இருசக்கர மின் வாகனம் வழங்கும் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும்.

இணையம் சார்ந்த சேவைப் பணி தொழிலாளர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறைக்கு ரூ.1,975 கோடி நிதி ஒதுக்கீடு” என்பது உள்ளிட்ட மேலும் பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

Exit mobile version