தமிழ்நாட்டில் ‘எல்லார்க்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும்’ என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அவற்றில் குறிப்பாக சமூக நீதி அடிப்படையில் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டில் தனிக் கவனம் செலுத்தி, அந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அபாரமாக இருப்பதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, அதற்கான காரணங்களையும் அம்மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் பட்டியலிட்டுள்ளது.
” பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் அனைத்து வசதிகளுடனும் கல்விக் கூடங்கள், விடுதிகள், கிராம அறிவு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ரூ.108.50 கோடியில் 154 நலத்துறை பள்ளிகளில், 480 புதிய வகுப் பறைகள் மற்றும் 15 அறிவியல் ஆய்வுக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 107 பட்டியல் மற்றும் பழங்குடியி னர் நலப் பள்ளிகளில் 256 வகுப்பறைகள், 42 கழிவறைகள், 21 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 65 மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வகங்கள் ரூ.125 கோடியில் கட்டப்பட்டு வருகின்றன.
சிறப்பான கல்வியை வழங்க உதவும் வகையில், 119 நலப்பள்ளிகளில் அறிவுத்திறன் வகுப்பறைகளும், 174 பள்ளிகளில் அறிவுத்திறன் பலகைகளும், 206 பள்ளி களில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 126 பட்டியல் மற்றும் பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளி களில் உள்ள அறிவியல் ஆய்வகங்களில் ரூ.3.15 கோடியில் ஆய்வு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நுழைவுத் தேர்வு பயிற்சிகள் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் பயிலும் பழங்குடியின மாண வர்களுக்கு ஜேஇஇ, நீட், க்யூட், நெப்ட் போன்ற உயர்கல்வி தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு மருத்துவக் கல்லூரியில் 2 மாணவர்களும், திருச்சி என்ஐடி கல்லூரி யில் 3 மாணவர்களும், திருச்சி தேசிய சட்டக் கல்லூரியில் ஒரு மாணவரும், சென்னை தர மணி என்ஐஎப்டியில் 4 மாணவர்களும் திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களும் என 16 மாணவர்களும் சேர்ந்து அரசின் கல்வி உதவித்தொகையுடன் பயின்று வருகின்றனர்.
சிறப்பு பயிற்சி வகுப்புகள் “புதியதோர் உலகு செய்” என்னும் புத்தாக்க பயிற்சி, அனைத்து ஆசிரியர்களுக் கும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு உயர்கல்வி வழி காட்டுதல் வழங்குவது குறித்த பயிற்சியும் வழங்கப்பட்டது. தொல்குடி புத்தாய்வு திட்டம் பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம், முனைவர் பட்ட மேலாய்வாளர் படிப்பினை மேற்கொள்ளும் இளம் வல்லுநர்களை ஊக்குவிக்கும் பொருட்டு “தொல்குடி புத்தாய்வு திட்டம்” எனும் உதவித்தொகை திட்டத்தை ரூ.1.50 கோடி செலவில் அரசு செயல்படுத்தி வருகிறது.
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 2024- 2025 ஆம் ஆண்டில் 96 சதவீதம் அதிகரித்து சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன் பயனாக 60 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவில் பழங்குடி இன சமுதாயத்தை சேர்ந்த ரோகிணி, சுகன்யா என்னும் இரண்டு மாணவிகள் 2024 ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்று திருச்சி என்ஐடி-இல் சேர்ந்து மாபெ ரும் சாதனை படைத்தனர். இந்த இருவரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல் நிலைப் பள்ளியில் படித்தவர்கள். நான் முதல்வன் திட்டம்தான் எங்களுக்கு உதவி யது என்று கூறி முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், சுந்தரராஜபுரம் நலத்துறை பள்ளி மாணவர் சி. பார்த்த சாரதி சென்னை ஐஐடியில் வானூர்தி வடி வமைப்பு பிரிவில் சேர்ந்து, தனது கனவு நிறைவேறியது என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
இப்படி, பட்டியல் மற்றும் பழங்குடியின சமூக மாணவர்கள் உயர் கல்வி நிறுவ னங்களில் சேர்ந்து பயில்வதற்கு வழிவகுத்து தந்துள்ளது. முதலமைச்சரின் இத்தகைய திட்டங்களால், பட்டியல் மற்றும் பழங்குடி யின இளைஞர்கள் கல்வியில் வரலாறு காணாத வகையில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்” என்று தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.