Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

திருவள்ளூருக்கு ரெட் அலர்ட்!

New Project (15)

சென்னை வானிலை ஆய்வு மையம், திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று அதி கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்து ரெட் அலர்ட் அறிவித்துள்ளது..

இன்று (டிச.2) திருவள்ளூருக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தல்.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் தற்போது காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரை அருகே மையம் கொண்டுள்ளது.

 இதனால், கடந்த 24 மணிநேரத்திற்கும் மேலாக சென்னை, திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்த தாழ்வுமண்டலம் அடுத்த சில மணிநேரங்களில் சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டு, இன்று இரவு மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் திருவள்ளூருக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சுஅலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு  யெல்லோ அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.

நாளை (டிசம்பர் 3) மேற்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Exit mobile version