Amazing Tamilnadu – Tamil News Updates

புனித பயணத்திற்கு புனித சேவை – ஜோஸ் சார்லஸ் மார்டின் ஏற்பாடு

வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு புதுச்சேரியில் இலவச மருத்துவ முகாமை சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வழங்குகிறார்

நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

என்ற திருக்குறளுக்கு அமைய இம்முறை வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு புதுச்சேரியில் இலவச மருத்துவ முகாமை வழங்குகிறார் மக்கள் நலன் கருதி தொடர்ந்து சமூக சேவைகளை செய்து வரும் ,சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்.

வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் அனைவரும் இந்த இலவச மருத்துவ முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பக்தர்கள் அனைவர் வழியிலும் அன்னை இருக்கிறாள்!
அவள் கருணை உங்கள் வாழ்வை ஒளிரச் செய்யும்!

பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் நலன் கருதி ,சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மாட்டின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மருத்துவ முகாமில், தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்படும்

ஆகஸ்ட் 22 ஆம் தேதி காலை 7:00 மணி முதல் முதல் 28 ஆம் தேதி மாலை 7 மணி வரை , ஏழு நாட்களும் இந்த இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது .

  1. புதுச்சேரி முருங்கம்பாக்கம் மந்தகரை மைதானம் அருகில்
    ஆகஸ்ட் 22 இரவு 10 மணி முதல் ஆகஸ்ட் 24 காலை 6:00 மணி வரை மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
  2. 24 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை சிதம்பரம் சாலியான்தோப்பு பகுதியில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  3. காரைக்கால், கோட்டுச்சேரி பகுதியில் ஆகஸ்ட் 25,26,27,28 ம் தேதி இரவு 7:00 மணி வரை மருத்துவ முகாம் நடைபெறும்.
  4. அத்துடன் காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் இரவு உணவு வழங்கப்படுகிறது.

மேலும் பாதயாத்திரை செல்வோர், மருத்துவ உதவி அவசர அழைப்புக்கு 6384700050 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். அதேபோல் வழங்கப்பட்டுள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் அடுத்தடுத்து மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை அறிந்து கொள்ளலாம்.

ஆகவே புதுச்சேரி வழியாக வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்வோர் இந்த இலவச மருத்துவ முகாம்களின் மூலம் உதவிகளை பெறலாம் என ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

Exit mobile version