கண் துடிப்பு முதல் கை நடுக்கம் வரை, மனஅழுத்தத்தை வெளிப்படுத்தும் 3 முக்கிய எச்சரிக்கைகள்!
இன்றைய வேகமான உலகில் மனஅழுத்தம் என்பது பலருக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. பல நேரங்களில் நமக்கு மனஅழுத்தம் இருப்பதே நமக்குத் தெரிவதில்லை. ஆனால், நமது உடல் சில மாற்றங்கள் மூலம் அதை நமக்கு உணர்த்தும். அந்த முக்கியமான அறிகுறிகள் இதோ:
1.கைகளில் ஏற்படும் நடுக்கம் அல்லது அசைவு
எந்த வேலையும் செய்யாமல் ஓய்வாக இருக்கும்போது, கையின் விரல்கள் மட்டும் தானாக அசைவது அல்லது துடிப்பது மனஅழுத்தத்தின் மற்றொரு அறிகுறியாகும். நரம்பு மண்டலம் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகும்போது இத்தகைய தன்னிச்சையான அசைவுகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய மாற்றங்களை உணர்ந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
2.காரணமற்ற திடீர் அழுகை
சில நேரங்களில் நாம் மகிழ்ச்சியாகவோ அல்லது அமைதியாகவோ அமர்ந்து கொண்டிருக்கும்போது, திடீரென்று கண்கள் கலங்கும். எந்தவிதமான சோகமான காரணமும் இன்றி தானாகவே கண்ணீர் வருவது, உங்கள் ஆழ்மனதில் அதிகப்படியான மனஅழுத்தம் தேங்கியிருப்பதைக் குறிக்கிறது. இப்படி அடிக்கடி நிகழ்ந்தால், அதைத் தற்காலிக சோகம் என்று கடந்து போகாமல் ஒரு மனநல நிபுணரை அணுகுவது நல்லது.
3.கண் இமைகள் துடித்தல்
பொதுவாக கண் இமை துடிப்பதை நாம் சில நம்பிக்கைகளோடு (சகுனம்) தொடர்புபடுத்துவோம். ஆனால், மருத்துவ ரீதியாக அடிக்கடி கண் இமை துடிப்பது என்பது உங்கள் உடல் மற்றும் மனம் மிகுந்த சோர்விலும் அழுத்தத்திலும் இருப்பதைக் காட்டுகிறது. வழக்கத்திற்கு மாறாகத் தொடர்ந்து கண்கள் துடித்தால், கண்களுக்குப் போதுமான ஓய்வு கொடுப்பதோடு, மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இந்த அறிகுறிகள் யாவும் உங்கள் உடல் விடுக்கும் எச்சரிக்கை மணிகள். இவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, முறையான மருத்துவ ஆலோசனை மற்றும் தியானம், யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் மனஅழுத்தத்திலிருந்து முழுமையாக மீண்டு வர முடியும்.

