இன்று ஒரே நாளில் மட்டும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.5,200 வரை உயர்ந்துள்ளது.
இரண்டு கட்டங்களாக ஏறிய விலை
இன்று காலை சந்தை தொடங்கியதிலிருந்தே தங்கம் விலை அதிரடியாக ஏறத் தொடங்கியது. காலையிலேயே சவரனுக்கு ரூ.2,960 உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த நிலையில், பிற்பகலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மேலும் ரூ.2,240 அதிகரித்தது. இதனால் இன்று ஒரே நாளில் மொத்தமாக சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்து புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
இன்றைய விலை நிலவரம் (28-01-2026):
ஒரு கிராம் தங்கம்: ரூ.15,610
ஒரு சவரன் தங்கம்: ரூ.1,24,880
விலை உயர்விற்கு என்ன காரணம்?
சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள், பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தைத் தேர்ந்தெடுப்பது போன்ற காரணங்களால் விலை இந்த அளவிற்கு உயர்ந்துள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக ஒரே நாளில் கிலோவுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை வெள்ளி விலையும் உயர்ந்திருப்பது நகை வியாபாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை ஒரு சவரன் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயைத் தொடவிருப்பதால், திருமண விசேஷங்களுக்காக நகை வாங்கத் திட்டமிட்டிருந்த நடுத்தரக் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர். இதே நிலை நீடித்தால் தங்கம் விலை இன்னும் சில நாட்களில் புதிய உச்சங்களைத் தொடும் என நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

