Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

டிட்வா புயல்: தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

New Project (8)

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதி கனமழை ஏற்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது!

இலங்கை கடற்கரை அருகில் இருக்கும் டிட்வா புயல் தற்போது புதுச்சேரியிலிருந்து தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 530 கி.மீ.தொலைவிலும் இருக்கிறது.

நவம்பர் 30-ம் தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரைப் பகுதிகளை நெருங்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும்.

மயிலாடுதுறை, அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மிககனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கடலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். தமிழகத்தில் நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நாளை அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

Exit mobile version