Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

பொங்கல் ஷாப்பிங் செல்பவர்கள் கவனத்திற்கு! பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்…

New Project - 2026-01-05T130331.246

சென்னை மாநகரின் இதயமாகவும், மிக முக்கியமான போக்குவரத்து மையமாகவும் விளங்கும் பிராட்வே பேருந்து நிலையம் (Broadway Bus Terminus), விரிவான மறுசீரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்காகத் தற்காலிகமாக மூடப்பட உள்ளது. இதன் காரணமாக, வரும் ஜனவரி 7-ம் தேதி முதல் பிராட்வேயில் இருந்து இயக்கப்பட்ட மாநகரப் பேருந்துகள் (MTC), ராயபுரம் மற்றும் தீவுத்திடல் (Island Grounds) ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முனையங்களில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராயபுரம் தற்காலிக முனையம்: எந்தெந்த பேருந்துகள்? அண்ணாசாலை மற்றும் ஈ.வி.ஆர். சாலை வழியாகச் செல்லும் பெரும்பாலான பேருந்துகள் ராயபுரம் முனையத்தை மையமாகக் கொண்டு இயங்கும்.

அண்ணாசாலை வழித்தடங்கள்: 11, 21, 26, 52, 54, 60, 10E, 11G, 11M, 155A, 17E, 17K, 188C, 188ET, 18A முதல் M51R வரை உள்ள பேருந்துகள்.

ஈ.வி.ஆர். சாலை வழித்தடங்கள்: 50, 101CT, 101X, 53E, 53P ஆகிய பேருந்துகள்.

நிறுத்தம்: ராயபுரம் நோக்கிச் செல்லும் போது, நார்த் ஃபோர்ட் சாலையில் உள்ள துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே பயணிகள் ஏறி, இறங்கிக் கொள்ளலாம். காமராஜர் சாலை பேருந்துகள் பாரிஸ் சிக்னலில் இருந்து என்.எஸ்.சி. போஸ் சாலை வழியாகத் திருப்பி விடப்படும்.

தீவுத்திடல் (Island Grounds) முனையம்: பீச் ஸ்டேஷன், மண்ணடி மற்றும் வேப்பேரி பகுதிகளை இணைக்கும் பேருந்துகள் தீவுத்திடல் முனையத்திலிருந்து இயக்கப்படும். இவை முத்துசாமி மேம்பாலம், TNPSC சாலை மற்றும் ஈவினிங் பஜார் வழியாகத் தங்களது சேவையை வழங்கும்.

பொங்கல் பண்டிகை: பொதுமக்களின் கவலை:

பாரிஸ் கார்னர் மற்றும் பிராட்வே பகுதிகள் பொங்கல் பண்டிகை காலக் கொள்முதலுக்கு (Shopping) மிகவும் புகழ்பெற்றவை. வரும் வாரம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்தத் திடீர் பேருந்து நிலைய மாற்றம் பொருட்களை வாங்கச் செல்லும் சாமானிய மக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. பிராட்வேயில் இருந்து சற்றுத் தள்ளியுள்ள ராயபுரம் மற்றும் தீவுத்திடலுக்கு முனையங்கள் மாற்றப்பட்டுள்ளதால், மூட்டை முடிச்சுகளுடன் வரும் பொதுமக்கள் கூடுதல் தூரம் நடக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

பயணிகள் இந்த மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு மாநகரப் போக்குவரத்து கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Exit mobile version