Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

காசாவில் பிறந்த குழந்தைக்கு ‘சிங்கப்பூர்’ என பெயர்!

New Project - 2025-10-22T141156.046

காசாவில் பிறந்த ஒரு பெண் குழந்தைக்கு அவரது தந்தை ஹம்தான் ஹடாட், ‘சிங்கப்பூர்’ என பெயர் சூட்டியுள்ளார்.

போரால் பாதிக்கப்பட்ட காசாவில், லவ் எய்ட் சிங்கப்பூர் (Love Aid Singapore) என்ற தொண்டு நிறுவனம் ஹம்தான் குடும்பத்திற்கு உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கியதற்கு நன்றி செலுத்தும் விதமாக இந்தப் பெயர் வைக்கப்பட்டது.

ஹம்தான், இந்த அமைப்பு நடத்திய சமையலறையில் சமையல்காரராகப் பணியாற்றினார். அவரது மனைவி கர்ப்பமாக இருந்தபோது, கடுமையான உணவுத் தட்டுப்பாட்டால் அவர்கள் இந்த சமையலறையின் உணவை நம்பியிருந்தனர்.

“நான் அவளுக்கு சிங்கப்பூர் என பெயரிட விரும்புகிறேன், ஏனெனில் நான் அவர்களை மிகவும் நேசிக்கிறேன்,” என குழந்தையை கையில் ஏந்தியபடி ஹம்தான் உருக்கமாகக் கூறினார். இந்த நெகிழ்ச்சியான செய்தியை லவ் எய்ட் சிங்கப்பூரின் நிறுவனர் கில்பர்ட் கோ இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

Exit mobile version