Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

மாங்காடு பகுதி மக்களே கவனம்! நாளை 5 மணி நேரம் மின்தடை – மின்சார வாரியம் அறிவிப்பு!

New Project (95)

சென்னையில் நாளை (பிப். 26) பராமரிப்புப் பணிகள் காரணமாக மாங்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது

சென்னையில் தடையற்ற மின்சாரத்தை வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (26.02.2026) மாங்காடு துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்கு மேல் பணிகள் நிறைவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் வழக்கம்போல் சீராகும். மாங்காடு மெயின் ரோடு, பட்டூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகர் பகுதிகளில் வசிப்போர் இந்த மின் மாற்றத்தை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Exit mobile version