Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் – பதக்கங்களைக் குவிக்கும் தமிழக வீரர்கள்!

New Project (33)

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மும்முறை தாண்டுதல் விளையாட்டில் தமிழகத்தை சேர்ந்த பிரவின் சித்ரவேல் 16.09 மீ. தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். 400 மீ. கலப்பு ஓட்டத்தில் வெங்கடேசன், சந்தோஷ், விஷால் ஆகியோர் முதலிடம் பிடித்து தங்கம் வென்றனர்.

தென்கொரியாவின் குமி நகரில் நடைபெறும் 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்தோஷ் குமார் தமிழரசன், விஷால் தென்னரசு கயிலவிழி, சுபா வெங்கடேசன் ஆகியோரும், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ரூபால் சவுத்ரியும் அடங்கிய இந்திய அணி, 3 நிமிடங்கள் 18.12 வினாடிகளில் பந்தயத்தை முடித்து முதலிடம் பிடித்தது. இந்த வெற்றி, இந்தியாவின் இரண்டாவது தங்கப் பதக்கமாகும்.

இந்திய அணி, முதல் கட்டத்திலேயே சந்தோஷ் குமார் தமிழரசனின் முன்னிலை ஓட்டத்துடன் ஆதிக்கம் செலுத்தியது. ரூபால் சவுத்ரி, சீனாவின் கடும் போட்டியை எதிர்கொண்டு முன்னிலையை தக்கவைத்தார். விஷால் தென்னரசு மேலும் முன்னேற்றம் கண்டு, இறுதியாக சுபா வெங்கடேசன் அற்புதமாக பந்தயத்தை முடித்தார். சீனா (3:20.52 வினாடிகள்) வெள்ளியும், இலங்கை (3:21.95 வினாடிகள்) வெண்கலமும் பெற்றன. இது, 2023 ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற இந்திய அணியின் தொடர்ச்சியான வெற்றியாகும்.

தமிழ்நாட்டு வீரர்களான சந்தோஷ், விஷால், மற்றும் சுபாவின் பங்களிப்பு இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. சுபா வெங்கடேசன், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்றவர் மற்றும் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். விஷால், 400 மீட்டரில் 45.57 வினாடிகளில் தனது சிறந்த நேரத்தை பதிவு செய்தார். இந்தியா, இரண்டாம் நாள் முடிவில் 2 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Exit mobile version