ஸ்மார்ட்போன் பாதுகாப்பு குறித்து புதிய விவாதத்தை கிளப்பும் வகையில், Google நடத்திய சமீபத்திய ஆய்வில் ஒரு ஆச்சர்யமான தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் ஸ்பாம் குறுஞ்செய்திகள் மற்றும் மோசடி இணைப்புகளால் iPhone பயனர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்றும், ஆண்ட்ராய்டு பயனர்கள் 58% குறைவாக இத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்ளுகிறார்கள் என்றும் ஆய்வு கூறுகிறது.
இந்தியா, பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட பெரிய ஸ்மார்ட்போன் சந்தைகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், தொலைபேசிகளுக்கு வரும் போலி இணைப்புகள், ஊதியம்/கேஷ்பேக் மோசடி செய்திகள், வங்கி OTP திருடும் scam SMS போன்றவை அதிகம் iPhone பயனர்களைத் தான் குறிவைக்கின்றன என்று தெரியவந்துள்ளது.
ஆய்வு கேள்வி எழுப்பும் முக்கிய காரணங்கள் – பல iPhone பயனர்கள் third-party app filters பயன்படுத்தாதது, SMS filtering மற்றும் spam detection ஆண்ட்ராய்டில் AI ஆதரவுடன் அதிக துல்லியமாக செயல்படுவது,இந்தியாவில் iMessage பயன்படுத்துபவர்கள் குறைவாக இருப்பதால் SMS அடிப்படையிலான spam அதிகம் வந்து சேருவது.
iPhone பயனர்களுக்கு ஏன் அதிக spam? – Google அறிக்கையின் படி, iPhone-ல் spam detection இயந்திரம் ஆண்ட்ராய்டை விட குறைவாக செயல்படுகிறது. மேலும், scam செய்திகளை வடிகட்ட third-party services பயன்படுத்தாத iPhone பயனர்கள் அதிகம் இருப்பதால், spam தாக்கம் அதிகரிக்கிறது.ஆனால் Apple தரப்பில், பயனர் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருவதாகவும், iOS இன் புதிய version-களில் spam கட்டுப்பாட்டுக்கு கூடுதல் AI அம்சங்கள் சேர்க்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பயனர்களுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் – தெரியாத எண்களிலிருந்து வரும் இணைப்புகளை திறக்க வேண்டாம்,SMS மூலம் வரும் KYC/வங்கி/UPI புதுப்பிப்பு link-க்களை நம்ப வேண்டாம்,Android-ல் Google Messages spam filter ON செய்திருக்கவும்,iPhone-ல் Filters > Unknown Senders அம்சத்தை இயக்கவும்,Google வெளியிட்ட ஆய்வு, Android மற்றும் iPhone பாதுகாப்பு பற்றிய புதிய விவாதத்துக்கு காரணமாகியுள்ளது.

