Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

ஆப்கானிஸ்தானுக்கு 188 ரன்கள் இலக்கு! டிகாக், ரிக்கல்டன் அதிரடி அரைசதம்!

New Project (69)

ஆப்கானிஸ்தானை அலறவிட்ட தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள்,188 ரன்கள் இலக்கு நிர்ணயம்!

இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வரும் 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரரான மார்க்ரம் 5 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தாலும், அதன் பிறகு ஜோடி சேர்ந்த குயிண்டன் டிகாக் மற்றும் ரிக்கல்டன் இணை ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களின் வியூகங்களைச் சிதறடித்த இந்த ஜோடி, அதிரடியாக விளையாடி தலா ஒரு அரைசதம் கடந்து அசத்தியது. 2-வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்த நிலையில், டிகாக் 59 ரன்களிலும் ரிக்கல்டன் 61 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருகட்டத்தில் விக்கெட்டுகளைத் தொடர்ந்து இழந்து தென் ஆப்பிரிக்க அணி ரன் குவிக்கத் தடுமாறிய போது, இறுதியில் களம் புகுந்த டேவிட் மில்லர் – யான்சென் கூட்டணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஓமர்சாய் 3 விக்கெட்டுகளையும், கேப்டன் ரஷித்கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தற்போது 188 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.

Exit mobile version